சிபிஎஸ்இ விருதுக்குத் தமிழக ஆசிரியர்கள் மூவர் தேர்வு
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதும் 39 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை அம்பத்தூர் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் எஸ். தீபா, சென்னை மயிலாப்பூர் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஷோபா ராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காரப்பள்ளியில் செயல்பட்டு வரும் பப்ளிக் பள்ளி முதல்வர் பிந்து ஆகியோர் விருது பெறவுள்ளனர். தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
|