LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுத்த காங்கிரஸ்! மோடியின் கடும் விமர்சனம், சூடு பிடிக்குமா?

புதுடில்லியில்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பா.ஜ.க வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்  இன்று உரையாற்றிய நரேந்திர மோடி காங்கிரஸ் அரசைக் கடுமையாக  விமர்சித்திருக்கிறார்.

        “பிரணாப் முகர்ஜியே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர். ஆனால், பிரதமர் பதவியில் பிரணாப் முகர்ஜியை அமரவைத்தால், தங்களது குடும்ப உறுப்பினர்களின் பதவி பறிபோய்விடும் என்று எண்ணியே காங்கிரசின் தலைமையானது மன்மோகன் சிங்கைப் பிரதமர் பதவியில் அமர வைத்துள்ளது. மக்களிடம் இருந்து மத்திய அரசு விலகியே இருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக தேசத்தையே பலி கொடுக்கிறது காங்கிரஸ் கட்சி. சோனியாவின் குடும்பத்துக்காக மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இப்போது வெகு பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் நன்மதிப்பையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாழாக்கி விட்டது. கடந்த  30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலே சிறிதளவு கூட கிடையாது. நாட்டில் இருந்து காங்கிரஸைத் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்” என்று தனது கடுமையான விமர்சனத்தைக் கூறியுள்ளார்.

            தேர்தல் களத்தில் பா.ஜ.க வினுடைய தேர்தல் வியூகம் எது என்பதை மோடியின் இந்தக் கடுமையான விமர்சனம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ராமர்கோயில், ராமர்பாலம், வெளிநாட்டுசோனியா, 2 ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் போன்ற எதையும் குறிப்பிடாமலேயே பிரணாப்பைத் தனிமைப்படுத்திப் புகழ்ந்திருப்பதும் காங்கிரசுக் கட்சியைக் கடுமையாகச் சாடியிருப்பதும் பா.ஜ.க உருவாக்க விரும்பும் அலை எது என்பதைக் காட்டியுள்ளது. இதே போன்றுதான் அதன் பிரச்சாரம் தொடருமா? மேலும் இந்தப் பிரச்சாரம் பா.ஜ.கவிற்கு போதுமான வெற்றியைப் பறித்துத் தருமா? என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

by MAYIL   on 03 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா
ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம் தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம்
உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல் உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல்
ரயில் சீட்டு முன்பதிவு செய்ய இன்றுமுதல் ஆதார் கட்டாயம் ரயில் சீட்டு முன்பதிவு செய்ய இன்றுமுதல் ஆதார் கட்டாயம்
மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை ரத்து - முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை ரத்து - முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.