''அகத்தியர் பிறந்த நட்சத்திரப்படி, டிசம்பர், 26ல், 'சித்தா தினம்' கொண்டாடப்படும்; இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது,'' என, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர், ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்தார்.'
'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில், 'உலக அளவில் சித்த மருத்துவத்தின் அங்கீகாரம் - சந்தர்ப்பங்களும், சவால்களும்' என்ற, தலைப்பிலான தேசிய கருத்தரங்கம், சென்னை, ஷெனாய் நகரில். நடந்தது.
கருத்தரங்கை துவக்கி வைத்து, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர், ஸ்ரீபத் யசோ நாயக் பேசிய தாவது: மத்திய அரசு, ஆயுஷ் அமைச்சகத்துக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், இந்திய முறை மருத்துவ துறைக்கு தேவையான, உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
அகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி, டிசம்பர் 26-ல், 'சித்தா தினம்' கொண்டாட, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இடம் தேர்வு செய்து கொடுத்தால், சென்னை, அரும்பாக்கத்தில், இந்திய முறை மருத்துவ கல்லூரியில் ஆடிட்டோரியம் அமைக்க, நிதி ஒதுக்கப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
|