|
|||||
விவசாயிகள் போராட்டம் எதிரொலி: கோதுமை, பருப்பிற்கு விலையை மத்திய அரசு உயர்த்தியது! |
|||||
விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிரொலியாக கோதுமை, பருப்பு வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. உத்தரகாண்ட் ஹிரித்துவாரில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். ஏறக்குறைய 10 நாட்கள் பயணம் செய்த விவசாயிகள், காசியாபாத் வந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லிக்குச் செல்ல அனுமதியளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிகள் தரப்பில் எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலான டிராக்டரை தடை செய்யக்கூடாது, அனைத்து விதமான பயிர்களையும் ஒரேமாதிரியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள்.
டெல்லி செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து, கண்டனம் தெரிவித்தனர்.
இநத ்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
நடப்பு ராபி பருவத்தில் கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 அதிகரிக்கப்பட்டு, ரூ.1,840 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சப்பிளவர் குவிண்டால் ஒன்றுக்கு 845 ரூபாயும், கடுகு மற்றும் ராப்சீடுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பார்லி குவிண்டால் ஒன்றுக்கு 30 ரூபாயும், மசூர் 225 ரூபாயும், பருப்பு 220 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதலாகக் கிடைக்கும்.
விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிரொலியாக கோதுமை, பருப்பு வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. உத்தரகாண்ட் ஹிரித்துவாரில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். ஏறக்குறைய 10 நாட்கள் பயணம் செய்த விவசாயிகள், காசியாபாத் வந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லிக்குச் செல்ல அனுமதியளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். விவசாயிகள் தரப்பில் எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலான டிராக்டரை தடை செய்யக்கூடாது, அனைத்து விதமான பயிர்களையும் ஒரேமாதிரியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள். டெல்லி செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து, கண்டனம் தெரிவித்தனர். இநத ்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நடப்பு ராபி பருவத்தில் கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 அதிகரிக்கப்பட்டு, ரூ.1,840 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சப்பிளவர் குவிண்டால் ஒன்றுக்கு 845 ரூபாயும், கடுகு மற்றும் ராப்சீடுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பார்லி குவிண்டால் ஒன்றுக்கு 30 ரூபாயும், மசூர் 225 ரூபாயும், பருப்பு 220 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதலாகக் கிடைக்கும். |
|||||
by Mani Bharathi on 04 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|