LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாங்கள் காய்கறி கடை நடத்தவில்லை !! கவர்மென்டுதான் நடத்துறோம் !! கபில் சிபல் !!!

வெங்காயத்தை அரசு விற்பதில்லை எனவும், வெங்காயம் விலை உயர்வு குறித்து, அதனை விற்பனை செய்யும் கடைக்காரர்களிடம்தான் கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் கபில் சிபல் பொறுப்பற்ற பதில் கூறியுள்ளார். 

 

நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையிலும், டெல்லியில் 80 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 

 

இந்நிலையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலிடம், செய்தியாளர்கள் நேற்று, வெங்காய விலை மேலும் உயருமா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்," இதனை ஏன் நீங்கள் வியாபாரிகளிடம் கேட்கக்கூடாது? அரசாங்கம் வெங்காயத்தை விற்பனை செய்வதில்லை" என நக்கலாக பதிலளித்தார். 

 

இவரது பேச்சுக்கு மருந்து தடவும் விதமாக, வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பதால்தான், விலை உயர்வுக்கு காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியுள்ளார்.  மேலும் விலை  உயர்வுக்கு ஏற்றுமதியும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவதால், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் சந்தைகளுக்கு வரத்தொடங்கி உள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் வெங்காய விலை சீராகிவிடும் என்றும் தாமஸ் தெரிவித்துள்ளார். 

 

by Swathi   on 19 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.