ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை ஒட்டி நேற்று நேற்று பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2 ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் தவறு செய்தவர்கள் அரசால் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவர். எதிர்காலத்தில் இயற்கை வளங்கள் ஒதுக்கீடு ஏல முறையில் நடைபெற அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும். மேலும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்குவது வருத்தம் தரக் கூடிய செயல் என அவர் தெரிவித்தார்.
|