LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி குழுவின் 56-ஆவது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதிச் சுமையைப் பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாகப் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆடம்பரப் பொருட்களுக்குக் கூடுதல் வரி வசூலிக்கப்படும்
என ஜிஎஸ்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பால் விலை குறையும் மற்றும் உயரும் பொருட்கள் பட்டியல் இதோ...

விலை குறையும் பொருட்கள்:
*  பால் பொருட்கள்: யு.எச்.டி பாலுக்கு இப்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது.
*  மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோக்கோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்படும்.
*  பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆகக் குறையும்.
*  சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
*  தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
*  மிக்சர் உள்ளிட்ட சாப்பிடத் தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் வறுக்கப்பட்ட பருப்புகள் சேராது.
*  சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
*  விவசாயப் பொருட்கள்: விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
*  உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
*  தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடுகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.
*  கரிக்கோல், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
*  நுகர்வோர் பொருட்கள்: ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் 32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, திரை, டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* காலணி மற்றும் ஆடை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
*  முடி ஆயில், சாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
*  தானுந்து துறை: சிறிய வாகனங்கள், 350 சிசி திறனுக்குக் கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
*  அனைத்து வாகன பாகங்கள் மீதான வரி 18%-ஆக உள்ளது.
*  மின் வாகனங்கள் மீதான வரி 5%-ஆக தொடரும்.
*  விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் மீதான வரி 5%-ஆக உள்ளது.


ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நடவடிக்கை காரணமாகப் பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதம் குறைந்துள்ள நிலையில், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றின் வரி 40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை அதிகரிக்கும் பொருள்கள்
*  பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
*  கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-ஆக இருந்தது.
*  ஆடம்பர பொருட்கள், சொகுசு வாகனங்கள், விளையாட்டுப் போட்டிக்கான சீட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.
* நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.
*  குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், பரிசுச்சீட்டு உள்ளிட்ட சேவைத் துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.

 

 

by hemavathi   on 05 Sep 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் 10 ஆண்டுகளில்  குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது இந்தியாவில் 10 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது
இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி
ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம் ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம்
2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது 2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது
நதிநீர் இணைப்பும்.  உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு! நதிநீர் இணைப்பும். உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு!
ராமேஸ்வரம் விமான நிலையத்துக்காக அரசு அடையாளம் கண்டுள்ள 5 இடங்கள் ராமேஸ்வரம் விமான நிலையத்துக்காக அரசு அடையாளம் கண்டுள்ள 5 இடங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.