LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

மது அறியா மாண்பாலர்களைக் கொண்டாடிய வரலாற்று மீட்புக்குழு !

 

அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வரலாறு மீட்புக்குழு சார்பில் தேசிய அளவில் மது அறியா 133 மாண்பாலர்கள் மற்றும் கலை, புலமை, இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்த 67 மாண்பாலர்களுக்கு மாமனிதர் விருது வழங்கும் விழா மருத்துவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அமுதா கலந்துகொண்டு மது அறியா மாண்பாளர்கள் மற்றும் கலை, புலமை, இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்தவர்களுக்குப் பதக்கம், விருது மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருளாக இருந்த கல் உருளையையும் வழங்கி பாராட்டினார் 

நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அமுதா பேசும்போது "நாம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை உணவு முறைகள் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியமாகும் நாம் வாழ்வதற்கும் அர்த்தம் வேண்டும் வாழ்ந்ததற்கும் அர்த்தம் வேண்டும் என நாம் வாழ வேண்டும் அர்த்தம் உள்ள வாழ்க்கையாக நாம் வாழ வேண்டும் வரலாறு படைத்தவர்களாகவும் படைப்பவர்களாகவும் நாம் வாழ வேண்டும்" எனக் கூறினார்.

முன்னதாக விருது பெறுபவர்களுக்குத் தமிழர்களின் கலாச்சாரப்படி பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு கிராமிய இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் இந்நிகழ்ச்சியை ஒட்டி வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் பண்டைய கால நாணயங்கள் பல்வேறு நாட்டில் உபயோகப்படுத்தப்படும் காசுகள் இந்தியாவில் இதுவரை பயன்பாட்டில் இருந்த காசுகள் மற்றும் பண நோட்டுகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

 

 

by hemavathi   on 01 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட... சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட...
2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு
தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப்  பதவியேற்றார் கமலஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் கமலஹாசன்
"கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பிரதமர் வருவது தமிழகத்துக்குப் பெருமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.