LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம்

தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்க முடிவு செய்த ஒருங்குறிச் சேர்த்தியம், தற்போது அந்த முடிவை பின்னெடுத்துக் கொண்டது என்ற நல்ல செய்தி இன்று கிடைத்துள்ளது.

போன ஏப்ரல் மாதம் தமிழின் ழ, ற எழுத்துகளை, தெலுங்கு ஒருங்குறிக்கு அதன் நெடுங்கணக்கில் சேர்க்கத் திரு,வினோதுராசன் முன்னீடு வைத்திருந்தார்.  ஒருங்குறிச் சேர்த்தியம் அதை ஏற்றுக்கொண்டு அறிவிக்கை செய்திருந்தது.
இதை மறுத்து நானும் இராம.கி ஐயாவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

 தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் வல்லுநர் குழு அமைத்து அதை ஆய்வு செய்து, அந்த முன்னீட்டில் இருக்கும் பிழையான கூறுகளைச் சுட்டிக்காட்டி, தமிழெழுத்துகளைச் சேர்க்கக் கூடாது என்று ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு, எழுதியிருந்தது.
 தற்போது ஒருங்குறிச் சேர்த்தியம் தன் முடிவை மாற்றிக்கொண்டு, அவ்வெழுத்துகளை பின்னெடுப்பதாக அறிவித்திருக்கிறது.

தமிழிணையக் கல்விக்கழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நன்றிகள்.
 வல்லுநர்குழுவில் பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இராசவேலு, முனைவர் இரமணசர்மா, முனைவர் சேம்சு அந்தோணி ஆகியோருடன் நானும் பங்காற்றியிருந்தேன். 

முனைவர் இராம.கியின் பன்மொழிப் புலமை இதில் முக்கிய பங்காற்றியது. அவரே அறிக்கையையும் வல்லுநர் குழுவின் சார்பில் எழுதினர். 
மேலும் இவ்வாய்வுகள் செம்மையாக நடந்து அறிக்கைகள் சேர்த்தியத்திற்குச் செல்ல உதவியாகத்   திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப இருந்தார்.
நேரடியாகவும், பின்புலத்திலும் உதவியும், சான்றுகளும், ஆதரவும் அளித்த  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சில தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த மொழி வல்லுநர் செய்த மொழி சார்ந்த உதவிகள் பயன் தந்தன. அவர்களுக்கு நன்றிகள். 

எளிதாக முடிந்திருக்க வேண்டிய இவ்விதயம், நம்மவர் சிலர் மேம்போக்காக அந்த முன்னீட்டைப் பார்த்துவிட்டு, "தெலுங்குக்குத் தமிழ் எழுத்துகள் போனால், அது தமிழுக்கு நல்லது" என்றும் "தமிழ் தெலுங்குக்குப் போவதை மறுக்க வேண்டியது தெலுங்கர்கள் உரிமை, நாம் ஏன் அலட்ட வேண்டும்" என்றும் முகநூலில் எழுதிக் குழப்பிவிட்டதால், பல இடங்களில்  எங்களுக்குக் கடுமையான நெருக்கடிகளைத் தந்தது. ஆயினும் இறுதியில் நல்லபடியாக முடிந்ததில் எமக்கு/நமக்கு மகிழ்ச்சி.

-நாக.இளங்கோவன்

தெலுங்குக்குத் தமிழ் எழுத்துகள் போகக்கூடாது என்ற ஆய்வறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கே காணலாம்.
https://nayanam.blogspot.com/2020/06/blog-post.html...


#ஒருங்குறி #Unicode

 

 

by hemavathi   on 05 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட... சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட...
2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு
கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப்  பதவியேற்றார் கமலஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் கமலஹாசன்
"கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பிரதமர் வருவது தமிழகத்துக்குப் பெருமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்!
மைசூருவில்  10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா மைசூருவில் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.