LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

மைசூருவில் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா

 

கர்நாடகாவில் உள்ள‌ மைசூருவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பரிசும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பின் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும், தமிழ் குடும்பத்தினருக்குக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவர் அனிதா கிருஷ்ண மூர்த்தி, சாம் ராஜ் நகரக் காவல் ஆய்வாளர் சாகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.மைசூருவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக ம‌திப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதுதவிர தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 57 மாணவர்களுக்குச் சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. மைசூருவில் இயங்கி வரும் அரசு தமிழ்ப் பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கப்பட்டது.
இதையடுத்து தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்குத் தனித்தனியாக இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளைப் பெற்ற‌னர்.

இந்த நிகழ்வு குறித்து மைசூரு தமிழ்ச் சங்க செயலாளர் ரகுபதி கூறுகையில், “கர்நாடக மாநிலம் மைசூருவில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தமிழர்களிடையே ஒற்றுமையும், முன்னேற்றமும் ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்ச் சங்கம் இயங்கி வருகிறது.

இங்குள்ள அரசு தமிழ்ப் பள்ளியை எங்களது சங்கம் தத்தெடுத்து, நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்குத் தமிழர்களிடையே வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்” என்றார்.

 

 

by hemavathi   on 08 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட... சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட...
2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு
தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப்  பதவியேற்றார் கமலஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் கமலஹாசன்
"கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பிரதமர் வருவது தமிழகத்துக்குப் பெருமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.