|
|||||
சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவைக் கவுரவித்த ஐஸ்லாந்து |
|||||
சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இஸ்ரோவுக்கு, ஐஸ்லாந்து நாட்டின் உயரிய விருதான 'லீப் எரிக்சன் லூனார் ' விருது வழங்கப்பட்டு உள்ளது.
நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதில் வல்லரசு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், 'சந்திரயான் 3' திட்டம் மூலம் இந்தியா அந்தச் சாதனையைப் படைத்தது. இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான்-3' விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆக.,23ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தது. இந்தச் சாதனைக்குப் பிறகு, உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி இந்நிலையில், இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அந்நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு '2023 - லீப் எரிக்சன் லூனார்' என்ற உயரிய விருதை வழங்கி உள்ளது. இதனை, இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்தியத் தூதர் பி.ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பி உள்ளார். |
|||||
by Kumar on 23 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|