LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

நாம் இழந்து(மறந்து)விட்ட மரவகைகளுள் முக்கியமான ஒன்று - இலுப்பை !!

சின்ன வயதில் எங்கள் வீட்டில் முழுச்சமையலும் இலுப்பை எண்ணெயில்தான்.

இலுப்பைவிதையை சேகரித்து. காயவைத்து, தரையில் பரப்பி அதன்மீது உரலை நிற்க்கவைத்து சுற்றும்போது கடினமான மேல் ஓடு உடையும் . பின்னர் கைகளால் உடைத்து தோல் நீக்கி, காயவைத்து.
செக்கில் கொடுத்து ஆட்டி எண்ணையாக்கி. சூடுபடுத்தி முற்றிய தேங்காய்பால்விட்டு முறிப்பார்கள்.
பின் மேலாக எடுத்து மண்பானையில் வைத்துவிட்டால் அடுத்த ஓர் ஆண்டுக்கு சமையலுக்கு அதுதான்.
நெய்போலாகிவிடும்.

காரக்குழம்பு வைத்து சாப்பிடும்போது அலுமினியகுழிக்கரண்டியால் அரைக்கரண்டிவிட்டு சாப்பிடுவார் அப்பா. 90 வயதை கடந்து இன்னமும் கிராமத்தில் ஆரோக்கியமாய்.

எண்ணெய்சாப்பிடுவது உடலுக்கு கெடுதி என போதித்த நவீனயுகத்தில் 33 வயதிலேயே சர்க்கரையும் அதன்பங்காளிகளும் என்னோடு.

பணப்பயிர்களான வேர்க்கடலை.தென்னை வந்தபின் இலுப்பை மரங்கள் வெட்டப்பட்டன.

இலுப்பைப்பூவாசம் சுவாசிப்பது இதயத்தை பலப்படுத்தும்.

இலுப்பை புண்ணாக்கு தலைக்கு தேய்த்துகுளிக்க பயன்படும்.

முற்றிய மரம் தேர் செய்ய பயன்படும்.

பார்ப்பதற்கு சப்போட்டாபோலவும்
உருவத்தில் ஆல்,அரசு போலவும்வளரும் இலுப்பை மருத்துவகுணம் கொண்டது.

மரத்தின் தழையை ஆடு விரும்பி சாப்பிடும்.
"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை"
என்றபொன்மொழியும் உண்டு.

இலுப்பைப்பூவில் பாட்டி செய்துதரும்'கில்கட்டி' என்ற இனிப்பு சிறப்பானது.(இதன் செய்முறை தெரிந்த யாரேனும் பதிவிட்டால் புண்ணியமாபோகும்)

மழையை ஈர்க்கும் தன்மைகொண்ட இம்மரங்களை மீட்கும் முயற்சியாக எங்கள் பசுமை ஆர்வலர் சிறார்ப்படை சென்னை மாநகராட்சியோடு சேர்ந்து இலுப்பை விதை பயிரிடும் விழாவில் ஈடுபட்டனர்.

பாரம்பரியம் காப்போம் .
ஆரோக்கியம் பேனுவோம்.

இயற்கை இனிது.
வானவன்.

by Swathi   on 21 Nov 2017  1 Comments
Tags: மரவகை   இலுப்பை   Iluppai   Iluppai Maram   Iluppai Maram Benefits        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
28-May-2019 09:57:03 கிருஷ்ணகுமார் said : Report Abuse
இலுப்பை மரம் எங்களிடம் உள்ளது. இதன் பூ, பழம் மற்றும் விதை ஆகியவற்றை சேகரிக்கும் முறைகளைத் தெரிவிக்கவும். தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகத தரவே ஆலோசனை கேட்கிறோம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.