LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின்கப்பல்கட்டும் தளம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள நவீனத் தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்துக்குப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிக்காக வந்தது.

 

கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையில் உலகின் வலிமை மிகுந்த நாடாகச் சீனா உருவெடுத்து வருகிற நிலையில், சீனாவின் அண்டை நாடான இந்தியாவுக்கு அமெரிக்கக் கப்பல் பழுதுபார்ப்புப் பணிக்காக வந்தது பெரும் கவனம் ஈர்த்தது.

 

 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

 

முக்கிய ஒப்பந்தம்: 2023-ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் - எல் அண்ட் டி நிறுவனத்துக்கும் இடையேமாஸ்டர் ஷிப்யார்ட் பழுதுபார்ப்பு ஒப்பந்தம் (எம்எஸ்ஆர்ஏ) கையெழுத்தானது. இதன்படி, அமெரிக்கக் கடற்படை கப்பல்களுக்கு சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் டி கப்பல் கட்டும் தளத்தில் 5 ஆண்டுகளுக்குப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கக் கடற்படை கப்பலான யுஎஸ்என்எஸ் சால்வார் சென்னை காட்டுப்பள்ளி தளத்துக்கு வந்தது.

 

அதேபோல், பிரிட்டனுடனும் 2022-ல் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது பிரிட்டன் கப்பல்களான ‘ஆர்எப்ஏ அர்கஸ்’, ‘ஆர்எப்ஏ லைம் பே’ ஆகிய இரண்டு கப்பல்கள் பராமரிப்புப் பணிக்காக சென்னை வந்துள்ளன. பிரிட்டனின் கடற்படைக் கப்பல்கள், இந்தியக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது பார்க்கப்படுவது இதுவே முதல் முறை.

 

ஏன் இந்தியா? - இந்தோ - பசிபிக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளை, ஏவுகணைத் தாக்குதல், ட்ரோன் தாக்குதல் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிற நிலையில், அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இப்பகுதியில் கூடுதல் கப்பல்களை ரோந்துப் பணிக்குக் கொண்டு வந்தபடி உள்ளன.

 

இந்தக் கப்பல்களில் பழுது ஏற்பட்டால், சொந்த நாட்டுக்குச் சென்று பழுதுபார்ப்பது என்பது நேர விரயம் மட்டுமல்ல செலவு மிகுந்ததும் கூட. இதே பணியை இந்தியாவில் மேற்கொள்வது என்பது பல விதங்களில் வசதியானது.

 

செலவும் குறைவு. இதனால், அந்நாடுகள் தங்கள் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.

 

 இதற்குப் பின்னால் அரசியல் காரணமும் உண்டு. வலிமையான கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா, தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

சீனாவும் ரஷ்யாவும் கூட்டாளிகள். அவ்விருநாடுகள் கடற்பரப்பில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது என்பது அமெரிக்காவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. இதனால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையையும் தொடர்ந்து வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

தென் சீனக் கடல் பகுதிக்கு அருகே இந்தியா அமைந்துள்ளதால், இங்குள்ள கப்பல் கட்டும் தளங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அமெரிக்கத் தன் கடற்படை இருப்பை சீனாவுக்குத் தொடர்ந்து உணர்த்திக்கொண்டிருக்க முடியும் என்று கூறுகின்றனர்.

 

இந்தியாவுக்கு என்ன பலன்?

 

இந்தியா தனது தேவைக்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பதோடு, உள்நாட்டுச் சேவைகளை, தயாரிப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

 

2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள கப்பல்மட்டுமான தளங்களைப் பற்றியும், அதை அமெரிக்க எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தும் பேசினார்.

 

இந்நிலையில், மேற்குலக நாடுகள் தங்கள் கப்பல் பழுதுபார்ப்புக்கு இந்தியாவைத் தேர்வு செய்வது என்பது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

 

தவிர, இது சர்வதேசக் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பில் இந்தியாவின் திறனை உலகுக்குக் காட்டுகிறது. மேலும், ராணுவ ரீதியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடனான உறவு மேம்படவும் இது வழிசெய்கிறது.

 

எல்லைப் பிரச்சினை சார்ந்து, சீனா இந்தியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்துலாக இருந்து வருகிறது. சீனாவை எதிர்கொள்ள இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. இந்தச்சூழலில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கடற்படைக் கப்பல்கள் இங்கு வருவதென்பது இந்தியாவுக்குக் கூடுதல் பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.

 

கரோனா காலகட்டத்தில் இந்தியா சொந்தமாகத் தடுப்பூசி உருவாக்கி அத்தனை கோடி மக்களுக்கும் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தது. வளர்ந்த நாடுகள் மட்டுமே விண்வெளித் துறையில் கோலோச்சி வந்தநிலையில், இந்தியா மிகக் குறைந்த செலவில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தது.

 

அந்த வரிசையில் தற்போது கப்பல் துறை சார்ந்து இந்தியா உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது. இதன் வழியே, தமிழ்நாடும் முக்கியத்துவம் பெறுகிறது.

by Kumar   on 13 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.