LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வங்கிகள் மூலம் பொதுமக்களிடம் உள்ள தங்கத்தை விலைக்கு வாங்கும் புதிய திட்டம் - ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் !!!

இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில், வங்கிகள் மூலம் பொதுமக்களிடம் உள்ள தங்கத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இதனை சரிசெய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைவிற்கு தங்கம் இறக்குமதியும் ஒரு முக்கிய காரணம் ஆகும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு இறக்குமதி வரியை, மூன்று மடங்காக உயர்த்தியது. ஆனால், இதனால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. 

 

இந்நிலையில், நாட்டில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை சீரமைக்கவும் ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் படி, வங்கிகள் பொதுமக்களிடம் உள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அதற்கு இணையான பணத்தை கொடுக்கும். அப்படி வங்கிகள் வாங்கும் தங்கத்தை தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனங்களிடம் அளிக்க ரிசர்வ் வங்கி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பற்றி பல வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

by Swathi   on 29 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.