LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வங்கிகள் மூலம் பொதுமக்களிடம் உள்ள தங்கத்தை விலைக்கு வாங்கும் புதிய திட்டம் - ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் !!!

இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில், வங்கிகள் மூலம் பொதுமக்களிடம் உள்ள தங்கத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இதனை சரிசெய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைவிற்கு தங்கம் இறக்குமதியும் ஒரு முக்கிய காரணம் ஆகும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு இறக்குமதி வரியை, மூன்று மடங்காக உயர்த்தியது. ஆனால், இதனால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. 

 

இந்நிலையில், நாட்டில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை சீரமைக்கவும் ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் படி, வங்கிகள் பொதுமக்களிடம் உள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அதற்கு இணையான பணத்தை கொடுக்கும். அப்படி வங்கிகள் வாங்கும் தங்கத்தை தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனங்களிடம் அளிக்க ரிசர்வ் வங்கி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பற்றி பல வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

by Swathi   on 29 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு
தபேலா இசைக் கலைஞர்  ஜாகிர் ஹுசைன் காலமானார் தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்
இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம் இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம்
இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்
கேவின்கேர் ,MMA , FWC  இணைந்து நடத்திய  சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர்  விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது. கேவின்கேர் ,MMA , FWC இணைந்து நடத்திய சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர் விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது.
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.