LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரிமலை ஐயப்பன் கோயில் நெரிசலைக் குறைக்க அனைத்து நாட்களிலும் நடை திறக்க கேரள அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து நாட்களிலும் நடைதிறக்கலாமா என கேரள அரசு ஆலோசித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும்  இருந்து வருகின்றது.  இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியே அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை கோயிலில் மற்ற கோயில்களைப் போல் எல்லா நாட்களும் நடை திறக்கப்படாது. இந்த நிலையில் பெண்களும் வந்தால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஐப்பசி மாதம் நடைதிறக்கும் நாளில் பெண்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து குறிப்பிட்ட நாளில் ஏராளமான பக்தர்கள் வருவதால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க அனைத்து நாட்களிலும் நடை திறந்து வைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தந்திரி குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து நாட்களும் நடை திறப்பது தொடர்பாக தந்திரி குடும்பத்தினரிடம் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையின் போது மாதத்தில் எல்லா நாட்களிலும் நடைதிறக்க முடியாது என்ற நிலை உருவானால் மாத பூஜைகளின் போது கூடுதல் நாட்கள் நடை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேபோல் பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தந்திரி குடும்பத்தினர் இணைந்து மனுதாக்கல் செய்ய உள்ளனர்

by Mani Bharathi   on 08 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.