பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி சுமார் 6.30 மணிக்கு முடிவடைந்தது. ஆட்சி மன்றக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், ''பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் அறிவுப்புக்கு பின் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், நான் ஒரு பஜாகவிற்கு சாதாரண தொண்டன், எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. இந்திய மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடுவேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆதரவு திரட்ட, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு வெற்றியைப் பெற்று தருவேன் என மோடி தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி உள்ளிட்ட பல பஜாக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
|