|
|||||
நியாயமான விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் ! சர்வதேச விசாரணையை இலங்கை சந்திக்க நேரிடும் - நவநீதம் பிள்ளை !! |
|||||
வரும் மார்ச் மாதத்துக்குள், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிடாவிட்டால், அந்நாடு சர்வதேச விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன் தினம், ஐ.நா சபையில், இலங்கையில் மனித உரிமை மீறகள் குறித்து விசாரணை மேற்கொண்ட நவநீதம் பிள்ளையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது:
போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், ராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை.
போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகரமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது.
விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் வழக்கறிஞர் தன்னிடம் விளக்கமளித்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. ஏ.சி.எப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் கண்டு உணர்ந்தேன்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் ராணுவமும் சென்றது. திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும்.
பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் ராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக் கூடிய சூழல் இருந்து வருகிறது. தனியார் நிலங்களை ராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் தன்னிடம் அளிக்கப்பட்டுள்ளதாக, நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 26 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|