மத்திய பிரதேச மாநிலம், நீமூச் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக, டெங்கு காய்ச்சலால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அங்குள்ள, பகுதிகளில், சுகாதாரப் பணிகள் மேற்கோள்ளாமல், கழிவுநீர் கால்வாய்கள்(Sweep) தேங்கி நிற்பதுதான் என பொது மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்'. இதையடுத்து, அம்மாவட்ட கலெக்டர், விகாஸ் நார்வால்(Vikas Narwal), அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். கடந்த, ஒரு வாரகாலமாக, நகரில் உள்ள கழிவுநீர்(Sweep) கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில், அவரே நேரடியாக களமிறங்கியுள்ளார்.இதனால் பொதுமக்கள் பலரும், சுத்தப்படுத்தும் பணியில், அவருடன் சேர்ந்து, ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
|