தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் அதற்கு எதிர்ப்பு கிளம் பாது என்று நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இது பற்றி ஷிண்டே மேலும் கூறும் போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல முக்கிய திருத்தங்களை செய்துள்ளது. இதன்படி, உளவு துறையின் கட்டுப்பாட்டில் தீவிரவாத தடுப்பு மையம் செயல்படாது. மேலும், கைது செய்யும் அதிகாரமும் அந்த அமைப்புக்கு இல்லை. குற்றவாளிகளை மாநில போலீசார்தான் கைது செய்வார்கள். மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த அம்சங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதனால், வரும் ஏப்ரல் 15ம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
|