தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தனியார் கல்லூரிகளில் பயிலும் செவிலியரை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தக் கூடாது, 50 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பணியமர்த்தலில் தேர்வு முறையைக் கைவிட்டு தங்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் கடந்த 7 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சு வார்த்தை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. செவிலியர் மாணவிகளின் கோரிக்கைகள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை செயலர் உறுதி அளித்தார். சுகாதாரத்துறை செயலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு கல்லூரி செவிலியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
|