ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரப் கானி, பிரதமா் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்தாா். சந்திப்பின் போது, உயா் மட்ட பேச்சுவாா்த்தை நடந்தது.
ஐதராபாத் அரசு இல்லத்தில், அதிபா் அஷ்ரப் கானியை பிரதமா் மோடி வரவேற்றாா். பின்னா் இருவரும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஆப்கான் அரசுக்கு இந்தியா எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்காக, இதுவரை ரூ.1.44 லட்சம் கோடி வரை இந்தியா செலவழித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று ஆப்கான் அதிபர் கானி உறுதிபடத் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|