|
|||||
உலக சாம்பியனை வீழ்த்தி தரவரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரானார் பிரக்ஞானந்தா |
|||||
நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதினார்.
சாதனையை படைத்துள்ளார்
இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 62- வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு சாம்பியனை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதான பிரக்ஞானந்தா.
இதற்கு முன்னர் இந்த சாதனையை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நிகழ்த்தியிருந்தார். டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) லைவ் ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறியதுடன் 2748.3 புள்ளிகளுடன் இரு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளையில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தங்கி 12-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ளார் பிரக்ஞானந்தா.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே இலக்கு.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரேட்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தற்போது 2721.3 புள்ளிகளுடன் 27-வது இடத்தில் உள்ளார். 13 சுற்றுகள் கொண்ட டாடா ஸ்டீல் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
டிங் லிரனை வீழ்த்தியது குறித்து பிரக்ஞானந்தா கூறும்போது, “வெற்றி பெற்றது நன்றாக இருக்கிறது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் எந்த வித ஆபத்தும் இல்லாமல் ஆட்டம் நகர்வதை கவனித்தேன். கருப்பு நிற காய்களுடன் விளையாடியது கூடுதல் போனஸ். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது தனிப்பட்ட இலக்கு. |
|||||
by Kumar on 17 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|