நாய்க்கு ரேஷன் பொருட்கள் வாங்கியது, 'ஆதார்' கார்டு இணைப்பின் போது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தார் மாவட்டத்தைச் சேர்ந்த, நிருசிங் போதர், 70, என்பவரது ரேஷன் அட்டையில், மனைவி மற்றும் வளர்ப்பு மகன் ராஜு என 3 பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
சமீபத்தில், 'ரேஷன் அட்டையுடன், அதில் உள்ள நபர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, நிருசிங்கிடம், ரேஷன் கடை ஊழியர் கூறினார்.
இதையடுத்து, நிருசிங் மற்றும் அவரது மனைவியின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டன. ஆனால், ராஜுவின் ஆதார் எண் இணைக்கப்படவில்லை.
இது குறித்து, ரேஷன் கடை ஊழியர், நிருசிங்கிடம் கேட்டபோது, ராஜு, தன் வளர்ப்பு நாய் என, அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி, அனுராக் வர்மாவுக்கு, தகவல் தெரிவித்தார். அவரும் அதிர்ச்சியடைந்து ரேஷன் கார்டில் உள்ள நாயின் பெயரை நீக்க, உத்தரவிட்டுள்ளார்.
|