LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..

 

திரு ரவி வெங்கடாச்சலம் என் 30 ஆண்டுகால நண்பர்.
நேற்று அமெரிக்கா வாழ் தன் பேத்தியுடன் திருப்புவனம் ஆத்மநாதன் நடத்தும் 5 நாள் தமிழ் விழாவுக்கு வருகை தந்தார். (அவரது பேத்தியின் இசை நிகழ்ச்சி இன்று நடந்தது.) நேற்று அவரிடம் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய விவரங்களைச் சொன்னேன்.
“நான் ஒரு சிறிய அறிவிப்பு வெளியிடுவேன்” என்று சொன்னவர் இன்று “என் நண்பர் பாலச்சந்திரன் போல் நானும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் அளிக்கிறேன்” என்று எந்த ஆர்பபாட்டமும் இன்றி அமைதியாக அறிவித்தார்!
ரவியின் கொடைப்பண்பும் அடக்க உணர்வும் தமிழ் ஆர்வமும் நம் அனைவரின் வணக்கத்திற்குரிய அரும் செயல்.
இன்றைய விழா ஃபெட்னாவின் கொடை.
விழாவிற்கு வருகை தந்து தலைமை ஏற்ற SRM கல்விக்குழுமத்தின் தலைவர் திரு பாரிவேந்தர் தம் பல்கலைக்கழகத்தின் தமிழ்பபேராயம் வழி விரைவில் தங்கள் கொடை வரும் என்று நற்செய்தி சொன்னார்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் திரு பாண்டிய ராஜன் தன் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் வளர்ச்சிக்கென ஆற்றும் ஆக்க பூர்வ செயல்களைப் பட்டியலிட்டு அனைவரையும் மகிழ்சசிக் கடலில் ஆழ்ததினார்.
“மெல்லத் தமிழ்இனி சாகாது;
மெல்லத்தமிழ் இனி வாழும்” என்று தன் உரையை நிறைவு செய்தார்.
இவர் இத்துறையில் தொடர்ந்தால் “விரைந்து தமிழ் இனி வாழும்”.
யாமினி என்ற இனிய தமிழ்ச்செல்வி தான் உண்டியலில் சேர்த்த ரூ.2,000/த்தை கொடையளித்த நிகழ்வு தமிழின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வளர்த்தது.கீழே யாமினியின் படம்.
-G.பாலச்சந்திரன், IAS, (Retd.)

திரு ரவி வெங்கடாச்சலம் என் 30 ஆண்டுகால நண்பர்.நேற்று அமெரிக்கா வாழ் தன் பேத்தியுடன் திருப்புவனம் ஆத்மநாதன் நடத்தும் 5 நாள் தமிழ் விழாவுக்கு வருகை தந்தார். (அவரது பேத்தியின் இசை நிகழ்ச்சி இன்று நடந்தது.) நேற்று அவரிடம் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய விவரங்களைச் சொன்னேன்.


“நான் ஒரு சிறிய அறிவிப்பு வெளியிடுவேன்” என்று சொன்னவர் இன்று “என் நண்பர் பாலச்சந்திரன் போல் நானும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் அளிக்கிறேன்” என்று எந்த ஆர்பபாட்டமும் இன்றி அமைதியாக அறிவித்தார்!

ரவியின் கொடைப்பண்பும் அடக்க உணர்வும் தமிழ் ஆர்வமும் நம் அனைவரின் வணக்கத்திற்குரிய அரும் செயல்.


இன்றைய விழா ஃபெட்னாவின் கொடை.


விழாவிற்கு வருகை தந்து தலைமை ஏற்ற SRM கல்விக்குழுமத்தின் தலைவர் திரு பாரிவேந்தர் தம் பல்கலைக்கழகத்தின் தமிழ்பபேராயம் வழி விரைவில் தங்கள் கொடை வரும் என்று நற்செய்தி சொன்னார்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் திரு பாண்டிய ராஜன் தன் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் வளர்ச்சிக்கென ஆற்றும் ஆக்க பூர்வ செயல்களைப் பட்டியலிட்டு அனைவரையும் மகிழ்சசிக் கடலில் ஆழ்ததினார்.“மெல்லத் தமிழ்இனி சாகாது;மெல்லத்தமிழ் இனி வாழும்” என்று தன் உரையை நிறைவு செய்தார்.இவர் இத்துறையில் தொடர்ந்தால் “விரைந்து தமிழ் இனி வாழும்”.

யாமினி என்ற இனிய தமிழ்ச்செல்வி தான் உண்டியலில் சேர்த்த ரூ.2,000/த்தை கொடையளித்த நிகழ்வு தமிழின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வளர்த்தது.கீழே யாமினியின் படம்.

 

-G.பாலச்சந்திரன், IAS, (Retd.)


by Swathi   on 31 Dec 2017  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
08-Jan-2018 14:52:59 செ.சுப்பிரமணியன் said : Report Abuse
நாம் படிப்பதற்கு ஏற்றவகையில் பிரசுரமாகும் போது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் சேவை தொடரட்டும் .
 
07-Jan-2018 01:53:06 வ.ச. பாபு said : Report Abuse
அன்புடையீர் வணக்கம். ௐரு பெரும் மகிழ்வான நிகழ்வைக் கூறி, மேலும் விரைந்து இனி தமிழ் வாழும் என்றும் கூறிவிட்டு, இன்றைய விழா (ஃபெட்னாவின்) கொடை என்றும் கூறி இருப்பது பொருத்தமானதுதானா? தமிழ் தமிங்கிலம் என்றாகிதான் இனி வாழவைக்கப் போகின்றோமா? பேரவையின் இன்றையப் பொருப்பாளர்கள் சிந்தித்திட வேண்டும். உள்ளத்தில் ஒரு பெருங்கொதிப்பு.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.