|
|||||
ஓய்வெடுக்க சென்றது சந்திரயான்-3 ரோவர் |
|||||
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை! ஆச்சரியம்!! நாடுகளின் நடுவே சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் இந்திய விஞ்ஞானிகளின் சாதனை. இப்போது ஒட்டுமொத்த உலக உதடுகளும் உச்சரிக்கும் விஞ்ஞான மந்திரம் சந்திரயான் -3.
நிலவுக்கு விண்கலம் அனுப்பிய 4-வது நாடு இந்தியா என்ற பெருமையோடு, நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு இந்தியா என்ற சாதனையை எட்டியுள்ளது. வல்லரசு நாடுகளே செல்ல துணியாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா நுழைந்து தன் ஆற்றலை உலகுக்கு பறைசாற்றியுள்ளது. சாதாரண மனித மூளைக்கு எட்டாத ஆச்சரியங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.
நிலவுக்கு சென்ற முதல் மனிதன் "நீல் ஆம்ஸ்டராங்" என இன்றளவும் நாம் பேசப்படும் நிலையில், நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா என்ற சரித்திரத்தை படைத்துள்ளது. ஒரு அணு வெடித்து சிதறி தனது ஆற்றலை வெளிப்படுத்துவது போல ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் மூளையும் ஒரு அணுவை போல வெடித்து சந்திரயான் -3 ஆக உருவெடுத்துள்ளது.
கண்ணுக்கு புலப்படாத சுற்று வட்ட பாதைகளை கணக்கிட்டு அனுப்பப்பட்ட ராக்கெட் சரியான பாதையில், வேகத்தில் பயணித்து இலக்கை அடைந்து சந்திரயான் 3-ஐ தனியாக பிரித்தது.
இந்த வேகத்தில் சென்றால் இத்தனை தூரத்தை அடைய முடியும். அதற்கு இவ்வுளவு எரிபொருள் தேவைப்படும் என துல்லியமாக கணித்த அந்த விஞ்ஞானிகளுக்கு சாதாரண பாராட்டு போதாது.
மேலும், பூமியின் சுற்றுவட்ட பாதையை கணித்து அங்கு வேகத்தை கூட்டியும், குறைத்தும் சுற்றுவட்ட பாதைகளை மாற்றியமைத்து, அடுத்து நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் -3-யை மாற்றி, அங்கும் கால நேரத்தை கணித்து சரியான நாளில் தரை இறங்க நேரம் குறித்து அதை கட்டுப்படுத்தும். அறிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்கத்தட்டில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் நம் விஞ்ஞானிகள். சந்திரயான் -3 என்றால் நமது விஞ்ஞான குழுவின் மூளை என்றே சொல்லலாம்.
சரி இவை ஒருபுறம் இருக்க சந்திரயான் -3 நிலவில் தரை இறங்கும் போது அங்கு தரையில் உள்ள மண் எப்படிப்பட்ட தன்மை கொண்டது. அதில் விக்ரம் லேண்டர் தரை இறங்கும் போது எப்படிப்பட்ட நிலைகளை சந்திக்க நேரிடும் என்பதையும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
அதாவது, பாலைவனத்தில் நடப்பதற்கும் கடற்கரையில் நடப்பதற்கும், வெட்டாந்தரையில் நடப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அப்படி நிலவில் உள்ள தரை பகுதியை சந்திரயான் -3-ல் உள்ள விக்ரம் லேண்டர் பழகிக்கொண்டால் தரையிறங்க ஏதுவாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் பெருத்த நம்பிக்கை.
அதற்காக நிலவில் உள்ள தரைப்பகுதி போன்ற மண் இந்தியாவில் எங்குள்ளது என்ற ஆராய்ச்சியில் இஸ்ரோ (ISRO) குழு இறங்கியது. அதன் முடிவில் நாமக்கல் மாவட்டம் இன்னாமலை கிராமத்தில் மண்மாதிரி சேரிக்கப்பட்டு, அதாவது நிலவின் தென் துருவத்தில் உள்ள தரைப்பகுதி மண்ணும், கிராம மண்ணும் ஒத்துப்போவதாக கருதிய இஸ்ரோ அந்த கிராமத்தில் இருந்து சுமார் ஐம்பது டன் மண்ணை கொண்டு சென்று சந்திரயான் லேண்டர் இறங்குவதற்காக களம் அமைத்து பழக்கியது. என்பதோடு சோதனை செய்து வெற்றி கண்டது. இதில், வெளிப்படும் ஆச்சரியம், உண்மை என்னவென்றால் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து, பார்த்து வடிவமைத்துள்ளனர் இந்தியாவின் பெருமை மிகு விஞ்ஞானிகள் குழு. பூமியில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு இத்தனை கோடிகளை செலவழிப்பதா என ஒருசிலர் ஆதங்கப்படுகின்றனர். ஆம் ஏன் இத்தனை கோடியை செலவழிக்க வேண்டும்? என ஒரு சில நேரங்களில் நாமும் நினைப்பதுண்டு. நிலவில் மனிதன் வாழ முடியுமா? அங்கு உயிரினங்கள் உள்ளனவா? காற்று உள்ளதா? நீர் உள்ளதா என ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இந்த இடத்தில் ஒரு உண்மையை உரக்க சொல்லியே ஆக வேண்டும் 2008 -ல் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதை இந்தியா உலகுக்கு அறிவித்தது. அதை கேட்டு விஞ்ஞான விழிகள் விரியத்தொடங்கின. அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு சந்திரயான் - 2 நிலவுக்கு அனுப்பப்பட்டது ஆனால் அது தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியில் துவண்டுவிடாமல் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு என்னென்ன பிரச்சனைகள் சந்திரயான் - 2ல் பூதாகரமாக வெளிப்பட்டன என்பதை ஆராய்ந்து சந்திரயான்-3 வடிவமைக்கப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. அதாவது, நிலவின் தென் துருவம் என்பது. மிகுந்த சவால்களை கொண்ட பகுதியாக கூறப்படுகிறது. அதாவது, 14 நாட்கள் பகலாகவும். 14 நாட்கள் இரவாகவும் இருக்குமாம். பகல் பொழுதுகளில் சூரிய வெப்பம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இரவு பொழுதுகளில் குளிர் என்பது -203 டிகிரி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பகல் 14 நாட்கள் மட்டுமே சந்திரயான் -3 ஆராய்ச்சியை மேற்கொள்ளும். ஏனெனில், சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும். மின்சக்தியை கொண்டே விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உள்ளிட்டவை இயங்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. 14 நாட்கள் பகல் பொழுது முடியும் தருவாயில் அடுத்த 14 நாட்கள் இரவு தொடங்கும் இருள் காலத்தில் விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை கிட்டத்தட்ட (Dead Condition) அதாவது உயிரற்ற நிலையில் இருக்கும். அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் இரண்டு நாட்களுக்கு தேவையான மின்சக்தியை மட்டுமே தேக்கிவைக்க முடியும் என சந்திரயான் -3 விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இருள் தொடங்கி இரண்டு நாட்கள்வரை அதாவது தேக்கி வைக்கப்பட்டுள்ள மின்சாரம் இருக்கும் வரை பூமிக்கு தகவல்களை லேண்டர் அனுப்பும் ஒருவேளை அதிசயிக்கத்தக்க வகையில் 14 இரவு நாட்கள் முடிந்து மீண்டும் வெயில் தொடங்கும் போது விக்ரம் லேண்டரில் உள்ள சோலார் கருவிகள் வேலை செய்ய தொடங்கினால் லேண்டருக்கும், ரோவருக்கும் மின்சாரம் கிடைக்கும். அப்போது, சந்திரயான்-3 மீண்டும் உயிர்பெறும் வாய்ப்புள்ளது. அதை "By luck" என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஜூலை 14-ம் தேதி ஏவப்பட்ட சந்திரயான்-3 கிட்டத்தட்ட 40 நாட்கள் பயணத்தை முடித்து கடந்த ஆகஸ்டு - 23-ம் தேதி மாலை 6:04 மணிக்கு
வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது
சந்திரயான்-3. அப்போது, அது அனுப்பிய முதல் செய்தி என்னவென்றால் "நான் என்னுடைய இலக்கை அடைந்துவிட்டேன்- நீங்களும்தான்" என்பதாகும்.
இனி நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 ஆராய்ச்சியை மேற்கொள்ளும். ஏன் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது அங்கு கனிம வளங்கள், எரி பொருட்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. அதை ஆராயவே முத்தியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த சக்தியை பூமியில் பயன்படுத்தி
மாற்று எரிபொருள் தயாரிக்கலாம். மேலும், மனிதன் அங்கு வாழ சாத்தியக் கூறுகள் உள்ளனவா எனவும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளனர். சந்திரயான்--3 அனுப்பிய முதல் செய்தி மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் இஸ்ரோ, சந்திரயான் - 3 நிலவின் தென்துருவ பகுதியின் ஆச்சரியங்களை பகிரும்போது அதை விஞ்ஞானிகள் ரகசியம் காக்கக் கூடும் என கூறப்படுகிறது. அந்த ரகசியம் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு வித்திடும் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.
சந்திரயான்-3 திட்ட இயக்குநர்
இந்த சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழர். அரசு பள்ளியில் படித்து படிப்படியாக உயர்கல்வி கற்று இன்று சாதனை படைத்த சந்திரயான் 3-ல் திட்ட
இயக்குநராக உயர்ந்து வெற்றி கண்டுள்ளார்.
பெரிய பள்ளம்
நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து தனியாக பிரிந்த ரோவர் நிலவின் தரைப்பகுதியில் பயணிக்கத்தொடங்கி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய தொங்கியது. இது விஞ்ஞானிகளுக்கு பெருத்த நம்பிக்கையை கொடுத்தது. அடுத்தநாள் பயணத்தில் ரோவருக்கு கிட்டத்தட்ட 3 மீட்டர் தொலைவில் பெரிய பள்ளம் இருப்பதை அறிந்தபோது, விஞ்ஞானிகள் அதன் பாதையை மாற்றியமைத்தனர்.
நிலவில் வெப்பநிலை
விக்ரம் லேண்டரில் இருக்கும் சேஸ்ட் (ChaSTE) - Chandra’s Surface Thermo physical Experiment என்ற கருவி நிலவின் வெப்பநிலையைக் கண்டறிந்துள்ளது.
நிலவில் -10 டிகிரி முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மண்ணுக்கு கீழே 80மி.மீ ஆழத்தில் -10 டிகிரியும் தரைக்கு மேலே 20 மி.மீ-ல் 60 டிகிரியும் பதிவு செய்துள்ளனர்.
தனிமங்கள் கண்டுபிடிப்பு
பிரக்யான் ரோவரில் இருக்கும் எல்.ஐ.பி.எஸ் - LASER Induced Breakdown Spectroscope என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் இருக்கும் தனிமங்களை கண்டறிந்துள்ளது. கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனிசு, சிலிகான், ஆக்சிஜன் போன்ற தனிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை அறியும் ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது.
நிலவில் ஏற்கெனவே தண்ணீர் இருப்பதாக சந்திரயான் 1 கூறியிருந்தது. அதனை மேலும் உறுதி செய்ய முடிந்தால் மனிதர்கள் சுவாசிக்கவும், எரிபொருளாக பயன்படுத்த ஹைட்ரஜனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும்.
செஞ்சூரி அடித்த ரோவர்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக 100 மீட்டர் தொலைவு வரை ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
ஓய்வெடுக்க சென்றது ரோவர்
ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஆய்வின் தரவுகளை பூமிக்கு அனுப்பிவிட்டு
ஓய்வெடுக்கச் சென்றது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் அடுத்த 14 நாட்கள் சூரிய ஒளியைப் பெறாது என்பதால் ரோவரில் இருக்கும் பேட்டரிகளில் மின்சாரத்தை நிரப்பி வைத்துவிட்டு ரோவரின் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளதாக அறிவிப்பு. செப்டம்பர் 22-ம் தேதி ரோவர் மீண்டும் கண்விழிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை! ஆச்சரியம்!! நாடுகளின் நடுவே சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் இந்திய விஞ்ஞானிகளின் சாதனை. இப்போது ஒட்டுமொத்த உலக உதடுகளும் உச்சரிக்கும் விஞ்ஞான மந்திரம் சந்திரயான் -3. நிலவுக்கு விண்கலம் அனுப்பிய 4-வது நாடு இந்தியா என்ற பெருமையோடு, நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு இந்தியா என்ற சாதனையை எட்டியுள்ளது. வல்லரசு நாடுகளே செல்ல துணியாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா நுழைந்து தன் ஆற்றலை உலகுக்கு பறைசாற்றியுள்ளது. சாதாரண மனித மூளைக்கு எட்டாத ஆச்சரியங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். நிலவுக்கு சென்ற முதல் மனிதன் "நீல் ஆம்ஸ்டராங்" என இன்றளவும் நாம் பேசப்படும் நிலையில், நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா என்ற சரித்திரத்தை படைத்துள்ளது. ஒரு அணு வெடித்து சிதறி தனது ஆற்றலை வெளிப்படுத்துவது போல ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் மூளையும் ஒரு அணுவை போல வெடித்து சந்திரயான் -3 ஆக உருவெடுத்துள்ளது. கண்ணுக்கு புலப்படாத சுற்று வட்ட பாதைகளை கணக்கிட்டு அனுப்பப்பட்ட ராக்கெட் சரியான பாதையில், வேகத்தில் பயணித்து இலக்கை அடைந்து சந்திரயான் 3-ஐ தனியாக பிரித்தது.இந்த வேகத்தில் சென்றால் இத்தனை தூரத்தை அடைய முடியும். அதற்கு இவ்வுளவு எரிபொருள் தேவைப்படும் என துல்லியமாக கணித்த அந்த விஞ்ஞானிகளுக்கு சாதாரண பாராட்டு போதாது. மேலும், பூமியின் சுற்றுவட்ட பாதையை கணித்து அங்கு வேகத்தை கூட்டியும், குறைத்தும் சுற்றுவட்ட பாதைகளை மாற்றியமைத்து, அடுத்து நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் -3-யை மாற்றி, அங்கும் கால நேரத்தை கணித்து சரியான நாளில் தரை இறங்க நேரம் குறித்து அதை கட்டுப்படுத்தும். அறிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்கத்தட்டில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் நம் விஞ்ஞானிகள். சந்திரயான் -3 என்றால் நமது விஞ்ஞான குழுவின் மூளை என்றே சொல்லலாம்.சரி இவை ஒருபுறம் இருக்க சந்திரயான் -3 நிலவில் தரை இறங்கும் போது அங்கு தரையில் உள்ள மண் எப்படிப்பட்ட தன்மை கொண்டது. அதில் விக்ரம் லேண்டர் தரை இறங்கும் போது எப்படிப்பட்ட நிலைகளை சந்திக்க நேரிடும் என்பதையும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதாவது, பாலைவனத்தில் நடப்பதற்கும் கடற்கரையில் நடப்பதற்கும், வெட்டாந்தரையில் நடப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அப்படி நிலவில் உள்ள தரை பகுதியை சந்திரயான் -3-ல் உள்ள விக்ரம் லேண்டர் பழகிக்கொண்டால் தரையிறங்க ஏதுவாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் பெருத்த நம்பிக்கை. அதற்காக நிலவில் உள்ள தரைப்பகுதி போன்ற மண் இந்தியாவில் எங்குள்ளது என்ற ஆராய்ச்சியில் இஸ்ரோ (ISRO) குழு இறங்கியது. அதன் முடிவில் நாமக்கல் மாவட்டம் இன்னாமலை கிராமத்தில் மண்மாதிரி சேரிக்கப்பட்டு, அதாவது நிலவின் தென் துருவத்தில் உள்ள தரைப்பகுதி மண்ணும், கிராம மண்ணும் ஒத்துப்போவதாக கருதிய இஸ்ரோ அந்த கிராமத்தில் இருந்து சுமார் ஐம்பது டன் மண்ணை கொண்டு சென்று சந்திரயான் லேண்டர் இறங்குவதற்காக களம் அமைத்து பழக்கியது. என்பதோடு சோதனை செய்து வெற்றி கண்டது. இதில், வெளிப்படும் ஆச்சரியம், உண்மை என்னவென்றால் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து, பார்த்து வடிவமைத்துள்ளனர் இந்தியாவின் பெருமை மிகு விஞ்ஞானிகள் குழு. பூமியில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு இத்தனை கோடிகளை செலவழிப்பதா என ஒருசிலர் ஆதங்கப்படுகின்றனர். ஆம் ஏன் இத்தனை கோடியை செலவழிக்க வேண்டும்? என ஒரு சில நேரங்களில் நாமும் நினைப்பதுண்டு. நிலவில் மனிதன் வாழ முடியுமா? அங்கு உயிரினங்கள் உள்ளனவா? காற்று உள்ளதா? நீர் உள்ளதா என ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இந்த இடத்தில் ஒரு உண்மையை உரக்க சொல்லியே ஆக வேண்டும் 2008 -ல் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதை இந்தியா உலகுக்கு அறிவித்தது. அதை கேட்டு விஞ்ஞான விழிகள் விரியத்தொடங்கின. அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு சந்திரயான் - 2 நிலவுக்கு அனுப்பப்பட்டது ஆனால் அது தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் துவண்டுவிடாமல் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு என்னென்ன பிரச்சனைகள் சந்திரயான் - 2ல் பூதாகரமாக வெளிப்பட்டன என்பதை ஆராய்ந்து சந்திரயான்-3 வடிவமைக்கப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. அதாவது, நிலவின் தென் துருவம் என்பது. மிகுந்த சவால்களை கொண்ட பகுதியாக கூறப்படுகிறது. அதாவது, 14 நாட்கள் பகலாகவும். 14 நாட்கள் இரவாகவும் இருக்குமாம். பகல் பொழுதுகளில் சூரிய வெப்பம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இரவு பொழுதுகளில் குளிர் என்பது -203 டிகிரி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பகல் 14 நாட்கள் மட்டுமே சந்திரயான் -3 ஆராய்ச்சியை மேற்கொள்ளும். ஏனெனில், சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும். மின்சக்தியை கொண்டே விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உள்ளிட்டவை இயங்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன. 14 நாட்கள் பகல் பொழுது முடியும் தருவாயில் அடுத்த 14 நாட்கள் இரவு தொடங்கும் இருள் காலத்தில் விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை கிட்டத்தட்ட (Dead Condition) அதாவது உயிரற்ற நிலையில் இருக்கும். அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் இரண்டு நாட்களுக்கு தேவையான மின்சக்தியை மட்டுமே தேக்கிவைக்க முடியும் என சந்திரயான் -3 விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருள் தொடங்கி இரண்டு நாட்கள்வரை அதாவது தேக்கி வைக்கப்பட்டுள்ள மின்சாரம் இருக்கும் வரை பூமிக்கு தகவல்களை லேண்டர் அனுப்பும் ஒருவேளை அதிசயிக்கத்தக்க வகையில் 14 இரவு நாட்கள் முடிந்து மீண்டும் வெயில் தொடங்கும் போது விக்ரம் லேண்டரில் உள்ள சோலார் கருவிகள் வேலை செய்ய தொடங்கினால் லேண்டருக்கும், ரோவருக்கும் மின்சாரம் கிடைக்கும். அப்போது, சந்திரயான்-3 மீண்டும் உயிர்பெறும் வாய்ப்புள்ளது. அதை "By luck" என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஜூலை 14-ம் தேதி ஏவப்பட்ட சந்திரயான்-3 கிட்டத்தட்ட 40 நாட்கள் பயணத்தை முடித்து கடந்த ஆகஸ்டு - 23-ம் தேதி மாலை 6:04 மணிக்குவெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதுசந்திரயான்-3. அப்போது, அது அனுப்பிய முதல் செய்தி என்னவென்றால் "நான் என்னுடைய இலக்கை அடைந்துவிட்டேன்- நீங்களும்தான்" என்பதாகும். இனி நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 ஆராய்ச்சியை மேற்கொள்ளும். ஏன் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது அங்கு கனிம வளங்கள், எரி பொருட்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. அதை ஆராயவே முத்தியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த சக்தியை பூமியில் பயன்படுத்திமாற்று எரிபொருள் தயாரிக்கலாம். மேலும், மனிதன் அங்கு வாழ சாத்தியக் கூறுகள் உள்ளனவா எனவும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளனர். சந்திரயான்--3 அனுப்பிய முதல் செய்தி மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் இஸ்ரோ, சந்திரயான் - 3 நிலவின் தென்துருவ பகுதியின் ஆச்சரியங்களை பகிரும்போது அதை விஞ்ஞானிகள் ரகசியம் காக்கக் கூடும் என கூறப்படுகிறது. அந்த ரகசியம் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு வித்திடும் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. சந்திரயான்-3 திட்ட இயக்குநர்
|
|||||
by Kumar on 03 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|