ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டும் கார் கடன் வழங்கப்போவதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ) அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, வங்கியின் பொருளாதாரத்தை சீராக்குவதற்காக கடன் பெறுபவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மாற்றத்தின் படி, கார் கடன் திட்டத்தின் மூலம் கார் வாங்குபவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்த்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று எஸ்.பி.ஐ.,யில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கார் கடன் உச்சவரம்பும் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
|