LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விஐபி வாகனங்களில் சிவப்பு விளக்குகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு !

கார்களில் சிவப்பு விளக்குகளை  பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபாலகவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,கார்களில் சிவப்பு எச்சரிக்கை விளக்கையும், ஒலிப்பான்களையும் பலரும் தவறாக பயன்படுத்துகிறார்கள். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது தனக்கு இத்தகைய அந்தஸ்து தேவை இல்லை என்று கூறினார். கார்களில் சிவப்பு விளக்கு, ஒலிப்பான் அந்தஸ்தை மந்திரிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு ஏன் வழங்க வேண்டும்? சிவப்பு விளக்கு கார்களுடனும், ஒலிப்பான்களுடனும் பலர் செல்வது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை நினைவூட்டுகிறது.


சிவப்பு எச்சரிக்கை விளக்கு, ஒலிப்பான்களுடன் கூடிய கார் அந்தஸ்து வழங்குவது தொடர்பான மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிக்கை சட்ட விரோதமானது என்பதால் அவற்றை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் கூட, அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை? போதிய காலஅவகாசம் அளிக்கப்பட்டும் இன்னும் அதை நிறைவேற்றாதது கோர்ட்டின் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது. மக்கள்தான் நமக்கு முதலாளிகள். அவர்கள் வரி கட்டுகிறார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் சிவப்பு விளக்கு மற்றும் ஒலிப்பான்களுடன் கூடிய காரை பயன்படுத்தக்கூடாது?


பாதுகாப்பு என்பது அந்தஸ்துக்கான அடையாளம் போல் ஆகிவிட்டது. உயர் அந்தஸ்து பெற்றவர்கள் என்பதற்கு என்ன அளவு கோல் வைத்து இருக்கிறீர்கள்? முக்கிய பிரமுகர்களின் கார்களில் உள்ள ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கார்களில் சிவப்பு விளக்குகளை தவறாக பயன்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். விசாரணையின் போது மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மேலும் 4 வார காலம் அவகாசம் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக கோர்ட்டு உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் என்றனர்.

by Swathi   on 19 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.