தேவார வைப்புத்தலங்களில் இடங்கொண்டீஸ்வரர் மிகவும் முக்கியத்தலமாக கருதப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள
இத்தலத்தில் சுவாமி இடங் கொண்டீஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்பாள் பிரகத் சுந்தர குஜாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம்
தருகிறாள்.கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் முன் மண்டபம், மகாமண்டபம் உள்ளது. நுழைவாயிலில் அடுத்து பலிபீடம், நந்திகேஸ்வரர் உள்ளனர்,
விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், துர்கை, பரமேஸ்வரி, கிருஷ்ணர், மகாலட்சுமி, தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வத்திருமேனிகள்
கோயிலின் பிராகாரத்தில் அமையப் பெற்றுள்ளன. அருகே கச்சப முனிவரின் திருமேனியும் உள்ளது.ஈசன் பிரஹத்சுந்தர குஜாம்பிகை அம்பாளோடு
திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தந்து அருளியதால் இவ்வூர் திருக்கல்யாணபுரம் எனப் பெயர் பெற்றது.
தேவார வைப்புத்தலங்களில் இடங்கொண்டீஸ்வரர் மிகவும் முக்கியத்தலமாக கருதப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சுவாமி இடங் கொண்டீஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்பாள் பிரகத் சுந்தர குஜாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் முன் மண்டபம், மகாமண்டபம் உள்ளது.
நுழைவாயிலில் அடுத்து பலிபீடம், நந்திகேஸ்வரர் உள்ளனர், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், துர்கை, ஆகிய தெய்வத்திருமேனிகள் கோயிலின் பிராகாரத்தில் அமையப் பெற்றுள்ளன. அருகே கச்சப முனிவரின் திருமேனியும் உள்ளது.ஈசன் பிரஹத்சுந்தர குஜாம்பிகை அம்பாளோடு திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தந்து அருளியதால் இவ்வூர் திருக்கல்யாணபுரம் எனப் பெயர் பெற்றது. |