இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில்
அருள்பாலிக்கிறார்.பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது.தருமபுரம் ஆதீனத்தின்
மேற்பார்வையில் நடந்து வரும் கோயில். சரப தீர்த்தம் உட்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ள கோயில் இது. சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன்.
அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன் , சந்திரன், சூரியன் ஆகியோரால்
பூஜிக்கப்பட்ட தலம்.அம்பாளுக்கு நான்கு கைகள், அட்ச மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.அம்பாளின் பீடம்
மேமே நான்கு மூலை உள்ள ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.இராமாயண மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து
காணப்படுகிறது.இராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது.அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை
போலவே இக்கோயில் உள்ளது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் மேற்பார்வையில் நடந்து வரும் கோயில். சரப தீர்த்தம் உட்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ள கோயில் இது.
சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன் , சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். அம்பாளுக்கு நான்கு கைகள், அட்ச மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் பீடமே நான்கு மூலை உள்ள ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.
இராமாயண மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. இராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை போலவே இக்கோயில் உள்ளது. |