மேற்கு நோக்கிய கோயில்களில் சக்தி அதிகம் என்பர். எனவே, அங்கு வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள், விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்ததுடன், இங்குள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இங்கு ஒரே இடத்தில் தரிசனம் செய்ய, 108 சிவன்
கோயில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிரதான சன்னதியில் ராமலிங்க சுவாமி இருக்கிறார். இவருக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற
அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன. அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் இங்கு பிரதான
மூலஸ்தானம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாமே பூ போட்டு வேண்டிக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை
நடக்கும்.சிவனின் வாகனமான நந்திதான், சுவாமி சன்னதி எதிரில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் நந்தியும், காமதேனுவும் இருக்கிறது. ராமபிரான்,
அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே, பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும், பிரதோஷ
வேளையில் அகத்தியர் பூஜை செய்வதாக ஐதீகம். காமதேனு சிலை, கழுத்தில் சலங்கைகள் அணிந்து, சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி
வடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு நோக்கிய கோயில்களில் சக்தி அதிகம் என்பர். எனவே, அங்கு வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள், விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்ததுடன், இங்குள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இங்கு ஒரே இடத்தில் தரிசனம் செய்ய, 108 சிவன் கோயில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிரதான சன்னதியில் ராமலிங்க சுவாமி இருக்கிறார்.
இவருக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன. அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் இங்கு பிரதான மூலஸ்தானம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாமே பூ போட்டு வேண்டிக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.சிவனின் வாகனமான நந்திதான், சுவாமி சன்னதி எதிரில் இருப்பார்.
ஆனால், இக்கோயிலில் நந்தியும், காமதேனுவும் இருக்கிறது. ராமபிரான், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே, பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும், பிரதோஷ வேளையில் அகத்தியர் பூஜை செய்வதாக ஐதீகம். காமதேனு சிலை, கழுத்தில் சலங்கைகள் அணிந்து, சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி வடிக்கப்பட்டுள்ளது. |