சுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைநத்துள்ளது. மாதம் தோறும் வரும் மூன்றாம்பிறை நாளில்
இங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி
தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து
உருவானது தான் இத்தல லிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு,
கோயில் எழுப்பப்பட்டது. இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் இது.
பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான
தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைநத்துள்ளது. மாதம் தோறும் வரும் மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும்.
இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். |