வழக்கமாக எல்லா கோயில்களிலும் மூலவருக்கு எதிரேதான் பிரதான நுழைவுவாயில் இருக்கும். ஆனால், இங்கு மூலவருக்கு பின் புறத்தில், மேற்கு திசையில்
நுழைவாயில் இருக்கிறது.சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் உத்ரவேதி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு இப்பெயர்
ஏற்பட்டதற்கு காரணம் உண்டு. சிவன், அம்பிகையின் இருப்பிடம் கைலாயம். கைலாயத்தின் திசை வடக்கு. ஆகவே அம்பிகை வடக்கு திசையை இருப்பிடமாகக்
கொண்டவள் ஆகிறாள். உத்ரம் என்றால் "வடக்கு', வேதி என்றால் "நாயகி' என்று பொருள் உண்டு. எனவே இவள் "உத்ரவேதி' என அழைக்கப்படுகிறாள். எனவே
இங்கு வழிபட்டால் கைலாயத்திற்கே சென்ற புண்ணியமும் கிடைக்கும். பிரகாரத்தில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் ஷாடச லிங்கமாக காட்சி தருகிறார்.
விசேஷ நாட்களில் இவரது சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது, இவரை வழிபட 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழக்கமாக எல்லா கோயில்களிலும் மூலவருக்கு எதிரேதான் பிரதான நுழைவுவாயில் இருக்கும். ஆனால், இங்கு மூலவருக்கு பின் புறத்தில், மேற்கு திசையில் நுழைவாயில் இருக்கிறது. சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் உத்ரவேதி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதற்கு காரணம் உண்டு. சிவன், அம்பிகையின் இருப்பிடம் கைலாயம். கைலாயத்தின் திசை வடக்கு.
ஆகவே அம்பிகை வடக்கு திசையை இருப்பிடமாகக் கொண்டவள் ஆகிறாள். உத்ரம் என்றால் "வடக்கு', வேதி என்றால் "நாயகி' என்று பொருள் உண்டு. எனவே இவள் "உத்ரவேதி' என அழைக்கப்படுகிறாள். எனவே இங்கு வழிபட்டால் கைலாயத்திற்கே சென்ற புண்ணியமும் கிடைக்கும். பிரகாரத்தில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் ஷாடச லிங்கமாக காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் இவரது சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. |