ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திறமையை கவுரவிக்கும் விதமாக, கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருவரைக் கவுரவிப்பது என்றால் அவரது சிலையை நிருவுவார்கள் அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சூட்டுவார்கள். அந்த வகையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கவுரவிக்கும் விதமாக கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை வைத்துள்ளார்கள்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழப்பட்டது. பின்னர், மர்கம் பகுதியில் உள்ள தெரு ஒன்றுக்கு ஏ.ஆர். ரஹ்மானின்(அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) பெயர் சூட்டப்பட்டது.
|