LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப் படாத நிலங்களுக்கு தெரு மதிப்பு நிர்ணயிக்கக் கூடாது: சார்பதிவாளர்களுக்கு உத்தரவு!

வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படாத நிலங்களுக்கு தெரு மதிப்பு நிர்ணயிக்கக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு ஐஜி உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து மண்டல டிஐஜிக்கள், சார்பதிவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சந்தை மதிப்பு நிர்ணயம் செய்தல் தொடர்பாக வழங்கப்பட்ட நெறிமுறைகளில் தெருக்களில் வரும் சர்வே எண்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கக்கூடாது எனவும் வழிகாட்டியில் ‘தெரு மதிப்பு காண்க’ என்று குறிக்க வேண்டும் எனவும், தெருவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு உள்ள சர்வே எண்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும் ஆணையிடப்பட்டு உள்ளது. 

ஆனால், சில பகுதிகளில் தெருக்களில் கட்டுப்படாத சர்வே எண்களுக்கு தவறாக ‘தெரு மதிப்பு காண்க’ என்று குறிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த சர்வே எண்களில் காட்டுபட்ட சொத்து பதிவுக்கு வரும் நிலையில், ஆவணத்தில் தெரு விவரம் குறிப்பிடாமல் தாக்கல் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், பதிவு அலுவலரால் அந்த ஊரின் உயர்ந்த பட்ச தெருமதிப்பு பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பின்பற்றாத ஊரின் உயர்ந்த பட்ச மதிப்பு பரிந்துரைத்து மாவட்ட வருவாய் அலுவலர் மதிப்பு நிர்ணயம் செய்ய அனுப்பப் படுகிறது. 

இதனால், சம்பந்தப்பட்ட ஆவணதாரர் உடனே பதிவு செய்த ஆவணத்தை திரும்ப பெற இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் மதிப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

அதன்படி வழிகாட்டியில் தெரு மதிப்பு காண்க என தவறாக வகைப்படுத்தப்பட்டு, ஆவணத்தில் சொத்து காட்டப்பட்ட விவரம் தெரிவிக்காமல் இருந்தாலோ அல்லது ஆவணதாரர் சொத்து தெருவில் அமையவில்லை என குறிப்பிட்டாலோ பதிவுக்கு தாக்கல் செய்த ஆவணத்தை நிலுவை வைத்து பின் உரிய நடவடிக்கைக்கு டிஐஜி முனமொழிவு அனுப்ப வேண்டும். 

சம்பந்தப்பட்ட டிஐஜி இடத்தை பார்வையிட்டும், சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் வில்லங்க சான்றில் முன் ஆவணங்கள் ஏதாவது தெரு மதிப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை பரிசீலித்தும் அந்த சர்வே எண்ணில் கண்ட சொத்தானது தெருவில் அமையப்பெறாத நிலையில் உரிய வகைப்பாட்டில் அந்த சர்வே எண்ணை பொருத்தலாம். 

சொத்து விவசாய நிலமாக இருப்பின் உரிய விவசாய நில வகைப்பாட்டிலும், மனையிடமாக இருப்பின் உரிய மனை நில வகைப்பாட்டிலும் பொறுத்து தெரிவிக்கப்படுகிறது. 

பொருத்தமான வகைப்பாடு இல்லாத நிலையில் புதுவகைப்பாடு டிஐஜியால் ஏற்றிக் கொள்ளலாம். ஒரு சர்வே எண் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது என்பதாலேயே தவறான மனை மதிப்பு வகைப்படில் பொறுத்த வேண்டும் என்பதில்லை. அந்த சர்வே எண்ணில் கண்ட சொத்து விவசாய நிலமாக இருப்பின் உரிய விவசாய மதிப்பு வகைப்பாட்டில் பொறுத்த வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 01 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.