சுப்பையா அருணன் (Subbiah Arunan) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் விஞ்ஞானி மற்றும் திட்ட இயக்குநர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவராவார். திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் படித்தார். கோவையில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, 1984ல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது, பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார். 2013ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார்.
|