LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்


இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்க்கூடல்-2024 என்ற மாநாடு பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த  மாநாட்டைத் தொடங்கிவைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார், :

"இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்கின்றனர். இது பெரும் கவலையைத் தருகிறது. தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் சான்றோர் நினைத்தால் இதை மாற்ற முடியும். தாய்மொழி என வரும்போது பலரும் அதைப் பொது சொத்து எனக் கருதுகின்றனர்.

தாய்மொழிக்காகப் போராடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்று வருகிறது"  என்றார் அவர். 

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வருங்காலங்களில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான மாதிரிப் படங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி, விரைவில் பணிகள் தொடங்கப்படும்" என்றார்

by hemavathi   on 04 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்விருக்கைக்குத் தமிழக அரசு மேலும் ரூ.1.5 கோடி ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்விருக்கைக்குத் தமிழக அரசு மேலும் ரூ.1.5 கோடி
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.