LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

இயல்-இசை-நாட்டியம்-நாடகத்தில் சிறந்த சாதனை படைத்த கலைஞருக்கு 10 லட்சம் பரிசு

 

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில்  கலைப் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது இதைத் தெரிவித்தார். மேலும் அவர் "அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.
இளைஞர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மதுரை அரசு கவின்கலைக் கல்லூரியில் ரூ.24 லட்சத்தில் நாடகப் பிரிவு தொடங்கப்படும். தமிழ்நாடு முனைவர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்தப் புதிய செயலி உருவாக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஏப்.2026-ம் ஆண்டோடு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சியக வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் மூத்த பார்வையாளர்கள், சிறுவர்களுக்காக இரண்டு மின்கல வாகனங்கள் இயக்கப்படும். திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார். 

இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்த சாதனை படைத்த கலைஞர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

தமிழகச் சட்டப்பேரவையில்  கலைப் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது இதைத் தெரிவித்தார். மேலும் அவர் "அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.இளைஞர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மதுரை அரசு கவின்கலைக் கல்லூரியில் ரூ.24 லட்சத்தில் நாடகப் பிரிவு தொடங்கப்படும்.

தமிழ்நாடு முனைவர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்தப் புதிய செயலி உருவாக்கப்படும்.சென்னை அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஏப்.2026-ம் ஆண்டோடு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சியக வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் மூத்த பார்வையாளர்கள், சிறுவர்களுக்காக இரண்டு மின்கல வாகனங்கள் இயக்கப்படும். திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார். 

 

by hemavathi   on 18 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட... சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட...
2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு
தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப்  பதவியேற்றார் கமலஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் கமலஹாசன்
"கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பிரதமர் வருவது தமிழகத்துக்குப் பெருமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.