LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

தாயம்மாள் அறவாணனுக்குச் செம்மொழித் தமிழ் விருது

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி, செம்மொழி நாள் விழா, 2025ம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள், சென்னை கலைவாணர் அரங்கில்  நடந்தன.

விழாவில், 2025ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். விருதுத் தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் கலைஞரின் சிலை வழங்கப்பட்டது.

விருது பெற்ற தாயம்மாள், 1944 மே 23ல் கன்னியாகுமரி மாவட்டம் சேந்தன் புதூர் என்ற ஊரில் பிறந்தவர். 'குழந்தை இலக்கியம் ஒரு பகுப்பாய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்
செம்மொழி நாளையொட்டி, மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பரிசுகள் வழங்கினார். தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 4,500; வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 3,500; எல்லை காவலர்களுக்கு 5,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இது, இந்த ஆண்டு முதல், 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதற்கான அரசாணையை, முதல்வர் நேற்று வெளியிட்டு, ஐந்து பேருக்குப் புதிய உதவித்தொகையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, செய்தித் துறை சார்பில் உருவாக்கப்பட்ட நான்காண்டு சாதனை மலர்; செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ராஜேந்திரன் சங்கர வேலாயுதன் எழுதிய, 'தமிழ் வினையடிகள் - வரலாற்று மொழியியல் ஆய்வு' மற்றும் பா.ரா.சுப்பிரமணியன் எழுதிய, 'சங்க இலக்கியச் சொல்வளம்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.

சுகி சிவம் தலைமையில், 'செம்மொழியின் தனிச்சிறப்பு அதன் தொன்மையே; அதன் இளமையே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

 

 

by hemavathi   on 03 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட... சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட...
2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​ன - மத்திய அரசு
தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் கங்கைகொண்ட சோழபுரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப்  பதவியேற்றார் கமலஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் கமலஹாசன்
"கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பிரதமர் வருவது தமிழகத்துக்குப் பெருமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் செலவில் கல்வெட்டு குறித்து தேசியக் கருத்தரங்கம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்! வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38 வது விழா காணொளிகளைக் கண்டு மகிழலாம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.