|
|||||
4 ஆண்டுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு! |
|||||
ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் நேரடி வரிகளின் முக்கியப் புள்ளி விவரத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டது அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 1,40,139 ஆக அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமான ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 88,649 ஆக இருந்தது. இதன்மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கையும் கடந்த 4 ஆண்டுகளில் 68 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2014-15 ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 48,416 ஆக இருந்தது. இது 2017-18 ஆண்டில் 81,344 ஆக அதிகரித்து உள்ளது. இந்தப் புள்ளிவிவரம் மூலம், கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 80 சதவீதம் அதிகரித்து உள்ளது தெரியவந்து உள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 3.79 கோடியாக இருந்தது. 2017-18 ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.85 கோடியாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலிப்பு தான் இது என்று ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்து உள்ளார். |
|||||
by on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|