|
||||||||
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரசியல் வரலாறு |
||||||||
தமிழக முன்னேற்ற கழகம் ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திர மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் உருவாக்கப்பட்டது. தோற்றம்: இக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் ஆவார். விழிப்புணர்வு மாநாடு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை,விரகனூர் ரோட்டில் நடந்தது.கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மாநாடு குறித்து விளக்கி பேசினார்.மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
||||||||
by Swathi on 29 Aug 2012 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|