LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தங்க டிபன் பாக்சில் சாப்பிட்ட திருடர்கள்!

தங்கத் தட்டில் சாப்பிட்டு, தங்க டம்ளரில் நீர் அருந்த யாருக்குத் தான் ஆசை இருக்காது? தங்க டிபன் பாக்சில் அள்ளி அள்ளிச் சாப்பிட்டு ஆசை தீர்த்த திருடர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத் பாத்தபஸ்தி எனும் பகுதியில் நிஜாம் அருங்காட்சியகம் உள் ளது.  மன்னர்கள் பயன்படுத்திய தங்க சிம்மாசனம், வைர, வைடூரிய ஆபரணங்கள், தங்கம், வைரங்களால் வடிவமைக்கப்பட்ட டிபன் பாக்ஸ், நவரத்தின கற்களால் உருவாக்கப்பட்ட குவளைகள், தந்தங்களால் ஆன பல ஆயுதங்கள் போன்ற விலையுயர்ந்த பல்வேறு பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதனைச் சுற்றிலும் சுமார் 15 மீட்டர் உயர சுற்றுச்சுவர் உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலையில் 3 பேர், இரவில் 5 பேர் என  காவலர்கள்  பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன், தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் போன்ற பொருட்கள் மாயமானது.

அருங்காட்சியகத்தின் மாடியில் உள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்து, பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க டிபன் பாக்ஸ் போன்றவற்றை திருடிச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா (வயது 23), முகமது முபின் (வயது 24) இருவரும் நண்பர்கள். வெல்டிங் தொழில் செய்து வந்த இவர்கள் இருவரும் அருங்காட்சியகத்துக்கு முன்கூட்டியே வந்து சென்றுள்ளனர்.

அருக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடி கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் தந்திரமாக தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளளனர். 

அருங்காட்சியகத்தில் திருடிய விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மும்பை சென்றுள்ளனர். அங்கு வசதியான ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். தங்க டிபன் பாக்ஸ் மிக விலை உயர்ந்தது என்பதால் வாங்குவதற்கு ஏற்ற நபர்கள் கிடைக்கவில்லை.

தங்க டிபன் பாக்ஸில் உணவு வைத்து சாப்பிட்டு தங்கள் ஆசையை நிறைவு செய்துள்ளனர். நிஜாம் கூட தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் சாப்பிட்டிருக்க மாட்டார். ஆனால் இவர்கள் தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் உணவு சாப்பிட்டுள்ளனர்.

எவ்வளவு முயன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான டிபன் பாக்ஸை விற்பனை செய்ய முடியாததால் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பிய போது போலீசார் பிடியில் சிக்கிக் கொண்டனர்.

இவை அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

by Swathi   on 12 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.