LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - தமிழில் வேள்விக் குண்டம் நடத்த உத்தரவு!

 

வருகிற ஜூலை மாதம் நடைபெறும் திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக வேள்வி குண்டங்கள் நிகழ்வில் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர் சந்திகேஸ்வரர் சேவை அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அப்போது தமிழில் வேள்வி குண்டங்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

தமிழ் சைவத் திரு வழிப்பாட்டில் பட்டம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழில் வேள்வி நடத்தி வருகிறேன். அகராதிகள், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் சாஸ்திரங்களிலிருந்து எடுத்த தமிழ் மந்திரங்கள் உள்ளன. சமஸ்கிருதத்துடன் சமமாகவே தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்குச் சம உரிமை வழங்கி, வேள்வி குண்டங்களில் தமிழில் வேள்வி செய்ய வேண்டும். மேலும் விமானக் கலசம், கருவறைகளில் தமிழ் வேள்வி ஆசிரியர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூன் 26) நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், தமிழில் வேள்வி செய்ய அனுமதிப்பது குறித்துப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அதேபோல், வருங்காலங்களில் நடக்க இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடத்துவதற்கான செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வகுக்க வேண்டும்." என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு முடித்து வைக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார்.

 

by hemavathi   on 26 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மைசூருவில்  10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா மைசூருவில் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
குழந்தை இலக்கியத்துக்கான சாகித்திய அகாடமி விருது பெறுகிறார் விஷ்ணுபுரம் சரவணன் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்திய அகாடமி விருது பெறுகிறார் விஷ்ணுபுரம் சரவணன்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் விருதுகள் அறிவிப்பு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் விருதுகள் அறிவிப்பு
தாயம்மாள் அறவாணனுக்குச் செம்மொழித் தமிழ் விருது தாயம்மாள் அறவாணனுக்குச் செம்மொழித் தமிழ் விருது
சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமை கழகத்தின் சார்பில் தமிழிசை மூவர் படம் திறப்பு சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமை கழகத்தின் சார்பில் தமிழிசை மூவர் படம் திறப்பு
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் முன்னெடுத்த உலகத்தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் முன்னெடுத்த உலகத்தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா
பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் - தமிழறிஞர்கள் கோரிக்கை பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் - தமிழறிஞர்கள் கோரிக்கை
மது அறியா  மாண்பாலர்களைக் கொண்டாடிய வரலாற்று மீட்புக்குழு ! மது அறியா மாண்பாலர்களைக் கொண்டாடிய வரலாற்று மீட்புக்குழு !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.