LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வரலாற்றுச் சுவடுகள் Print Friendly and PDF

செஞ்சிக் கோட்டையை உலக புராதனச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ

தேசிய நினைவுச்சின்னமாக உள்ள செஞ்சிக் கோட்டையை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ இன்று (ஜூலை 12) அறிவித்துள்ளது. 


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செஞ்சிக்கோட்டை 13ம் நூற்றாண்டில் கோன் சமூக ராஜ வம்சத்தால் கட்டப்பட்டது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின்  ஆட்சியை நிறுவிய ஆனந்தகோன் என்ற குறுநில மன்னரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது.

மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவையும், 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு மிகப்பெரிய அரணாக விளங்கியது. இதனால் ‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியால் பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை ‘கிழக்கின் ட்ராய்’ என்று அழைத்தனர்.

1921ம் ஆண்டு செஞ்சிக்கோட்டை முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.   இதற்கிடையே 2024- 25ம் ஆண்டில் இந்தியாவில் செஞ்சிக் கோட்டை உட்பட 12 இடங்களை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து யுனெஸ்கோ அமைப்பினர் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கடந்த செப்டம்பர் 27ம் தேதி செஞ்சிக்கோட்டையை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில், செஞ்சிக் கோட்டையை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதன்மூலம் செஞ்சிக் கோட்டைக்குச் சர்வதேச அளவில் அங்கீகாரம், சுற்றுலா மேம்பாடு, நிதி உதவிகள் மற்றும் சட்டப்பூர்வப் பாதுகாப்பு ஆகியவை வழங்கப்படும்.

இது வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


by hemavathi   on 12 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராஜேந்திர சோழன் நாணயத்தில் சிறப்புகள் என்னென்ன? ராஜேந்திர சோழன் நாணயத்தில் சிறப்புகள் என்னென்ன?
யுனெஸ்கோ கூரியர் தமிழ் - வரலாறு யுனெஸ்கோ கூரியர் தமிழ் - வரலாறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.