LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

குழந்தை இலக்கியத்துக்கான சாகித்திய அகாடமி விருது பெறுகிறார் விஷ்ணுபுரம் சரவணன்

 

சாகித்திய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்குப் பால சாகித்திய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளைப் பெறும் எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


அந்த வகையில் தமிழில் இந்த ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது, 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படுகிறது. 

கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் இவர். 
வாத்து ராஜா, கதை கதையாம் காரணமாம், வானத்துடன் டூ, வித்தைக்காரச் சிறுமி, நீலப்பூ, கயிறு உள்ளிட்ட கதைகளை எழுதியிருக்கிறார். சிறார்கள், இளையோரிடையே சாதி, ஏற்றத் தாழ்வுகள், சமத்துவம், சமூகம் குறித்து விழிப்புணர்வையும், கலந்துரையாடலையும் எழுத்தின் வழியே நிகழ்த்துவதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். 

 இந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் பணியாற்றிவரும் இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். 
 

 

 

by hemavathi   on 18 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மைசூருவில்  10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா மைசூருவில் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - தமிழில் வேள்விக் குண்டம் நடத்த உத்தரவு! திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - தமிழில் வேள்விக் குண்டம் நடத்த உத்தரவு!
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் விருதுகள் அறிவிப்பு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் விருதுகள் அறிவிப்பு
தாயம்மாள் அறவாணனுக்குச் செம்மொழித் தமிழ் விருது தாயம்மாள் அறவாணனுக்குச் செம்மொழித் தமிழ் விருது
சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமை கழகத்தின் சார்பில் தமிழிசை மூவர் படம் திறப்பு சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமை கழகத்தின் சார்பில் தமிழிசை மூவர் படம் திறப்பு
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் முன்னெடுத்த உலகத்தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் முன்னெடுத்த உலகத்தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா
பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் - தமிழறிஞர்கள் கோரிக்கை பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் - தமிழறிஞர்கள் கோரிக்கை
மது அறியா  மாண்பாலர்களைக் கொண்டாடிய வரலாற்று மீட்புக்குழு ! மது அறியா மாண்பாலர்களைக் கொண்டாடிய வரலாற்று மீட்புக்குழு !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.