வாக்குபதிவு இயந்திரத்தில் உருவாக்கப்படும், புதிய வசதியை பயன்படுத்தி வேட்பாளர்களுக்கு சாதகமான வாக்குகளை விட, வேட்பாளர் நிராகரிப்பு வாக்குகள் அதிகமாக இருந்தால் தொகுதியின் உறுப்பினர் யார்? என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதன் படி, "பொதுவாக வாக்குப்பதிவின் போது பல செல்லாத வாக்குகள் பதிவாகும். சில தொகுதிகளில், வேட்பாளர்கள் வாங்கும் வாக்குகளை விட செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். அப்போது பதிவான வாக்குகளில் யார் அதிக வாக்கு வாங்கி இருக்கிறாரோ அவர் தேர்ந்து எடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுவார். அதே போல, இப்போது, யாருக்கும் இல்லை என்று பதிவான வாக்கு அதிகம் இருந்தாலும், வேட்பாளர்களில் அதிக வாக்கு பெற்றவர் தேர்ந்து எடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
அடுத்த மாதம் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த தேர்தலிலேயே, உச்ச நீதிமன்றம் கூறியது போல வாக்குப்பதிவு எந்திரங்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
|