சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை பொறுத்த வரையில், 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதை மாற்றி அனைத்து பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ‘அனைத்து வயது பெண்களையும் கோயிலில் அனுமதிக்கலாம்’ என்று கேரள அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "கடவுளை வணங்குவதில் ஆண் - பெண் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்து தீர்ப்பளித்தனர்.
|