LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாவலாசிரியரும் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளருமான திரு. டி.செல்வராஜ் மறைவுக்கு வலைத்தமிழ் அஞ்சலி செலுத்துகிறது..

எழுத்தாளர் திரு.  டி. செல்வராஜ் அவர்கள் ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. 

1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர்.

அவருடைய முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும், அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல் அவரது அடுத்த முக்கியமான படைப்பாகும்.ஊமை ஜனங்கள் என்கிற பேரில் அக்கதை திரைப்படமாகவும் வெளிவந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்” நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 40 களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.  200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை, "நோன்பு" உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவர் 6 நாவல்கள் எழுதியுள்ளார்.  மலரும் சருகும் - திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாகக் கொண்டது , தேனீர் -தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டது, இது திரைப்படமாகவும் வந்துள்ளது.  மூலதனம் -நெருக்கடிநிலைக் காலத்தைப் பின்னணியாகக்கொண்டது , தோல் -தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.

சமூக சிந்தனையாளர்களும், படைப்பாளிகளுக்கும் என்றுமே மறைவில்லை.  அவர்களின் சிந்தனைகளும், படைப்புகளும் இந்த சமூகத்தின் பயன்பாட்டில் உள்ளவரை அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். 

அன்னாரின் மறைவிற்கு வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்..

by Swathi   on 23 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.