LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    யோகா-தியானம் Print Friendly and PDF

யோகாசனம் பற்றிய கேள்வி - பதில்கள் !

இன்றைய உலகில் பிரபலம் அடைந்து வரும் ஒரு ஆரோக்கியமான கலைதான் யோகாசனம். நமது முன்னோர்களின் உடல் வலிமைக்கு சித்தர்கள் அருளிய யோகசனமே காரணம் என பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. யோகாசனத்தை செய்தால் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது மட்டுமல்லாமல் சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் இருக்கும்  என யோகா வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். யோகா செய்யும் போது பெரும்பலானோருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளன.
 
யோகாசனம் செய்யவேண்டிய நேரம் எது?

யோகாசனம் அதிகாலை சூரிய உதயத்தின் போது செய்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. சூரியன் உச்சிக்கு வந்தபிறகு  யோகாசனம் செய்தால் அதன் பலன் கிடைக்காது. அதிகாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளும், மாலை 5.30 மணிக்குமேல் 7 மணிக்குள்ளும் யோகா செய்தால் நல்லது. யோகாசனம் செய்யும்போது கண்டிப்பாக வியர்வை வரக்கூடாது.

சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து யோகாசனம் செய்யலாம்?

சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஐந்து மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனப் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம்.

யோகாசனத்தை வெறும் தரையில் செய்யலாமா?

வெறும் தரையில் யோகாசனம் செய்யக்கூடாது. அழுத்தாத விரிப்பின் மேல் யோகாசனம் செய்யவேண்டும். சமூக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை விரித்தும் யோகாசனம் செய்யலாம்.

கடுமையாக உழைப்பவர்களுக்கு யோகாசனம் முக்கியமா?

கடுமையாக உழைத்தாலும் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். குறிப்பாக விபாரிதகரணி, சர்வாங்காசனம், அர்த்தசிரசாசனம், சிரசாசனம் ஆகியவற்றோடு மாற்று ஆசனங்கள் செய்து நாடி சுத்தியும் செய்தால் நல்லது.

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் யோகாசனம் செய்யலாமா?

கண்டிப்பாக செய்யலாம். ஆனால் அவர்களுக்கு உடல் வளையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே ஆசனங்களை இவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. ஆசனத்தின் முழு நிலை மெதுவாகவே இவர்களுக்கு வரும். ஆகவே இவர்கள் யோகாசனங்களை மெதுவாகச்செய்யவேண்டும். ஆசனத்தில் பூரண நிலை அடைய உடல் வலி மேலும் சுளுக்கு ஆகியன ஏற்படும். மாமிசம் சாப்பிடுவர்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நல்லது.

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு தேவையா?

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை. அனைத்து வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

மலம் வெளியேறாமல் இருக்கும்போது யோகாசனம் செய்யலாமா?

தினமும் காலையில் எழுந்து இரண்டு கிளாஸ் பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிடில் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில நொடிகளிலே மலம் வெளியேற உணர்ச்சி வரும். அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனத்தை தொடரலாம்.

யோகாசனம் செய்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு உண்டா?

நோய் வாய்ப்பட்டவர்கள் நோய் தீரும்வரை யோகாசன பிராணாயாமத்துடன் கடுமையாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் நோய் விரைவில் குணமாகிவிடும். சாதாரணமாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுமையாக உணவுப் பத்தியம் இருக்க வேண்டியதில்லை. நடைமுறையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. உடல் வளையும் தன்மை ஏற்படும்.

by Swathi   on 28 Jan 2013  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
pranayoga pranayoga
வேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம் வேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம்
குடும்ப அமைதி, வேதாத்திரி மகரிசி | Kudumba Amaithi - Vethathiri Maharishi Speech, Part-2 குடும்ப அமைதி, வேதாத்திரி மகரிசி | Kudumba Amaithi - Vethathiri Maharishi Speech, Part-2
உடற்பயிற்சியின் அவசியம், வேதாத்திரி மகரிசி | Importance of Physical Exercise, Vethathiri Maharishi உடற்பயிற்சியின் அவசியம், வேதாத்திரி மகரிசி | Importance of Physical Exercise, Vethathiri Maharishi
குடும்ப அமைதி, வேதாத்திரி மகரிசி | Kudumba Amaithi - Vethathiri Maharishi Speech குடும்ப அமைதி, வேதாத்திரி மகரிசி | Kudumba Amaithi - Vethathiri Maharishi Speech
அகத்தவம் என்றால் என்ன? - வேதாத்திரி மகரிஷி | What is agathavam? - Vethathiri Maharishi அகத்தவம் என்றால் என்ன? - வேதாத்திரி மகரிஷி | What is agathavam? - Vethathiri Maharishi
மௌனமாக இருப்பது நல்லதா? | Silence is Good?, Healer Baskar மௌனமாக இருப்பது நல்லதா? | Silence is Good?, Healer Baskar
நினைப்பதை நடக்க வைப்பது எப்படி? எண்ணம் தான் வாழ்க்கை, Healer Baskar நினைப்பதை நடக்க வைப்பது எப்படி? எண்ணம் தான் வாழ்க்கை, Healer Baskar
கருத்துகள்
09-Aug-2016 02:13:08 ஐயப்பன் said : Report Abuse
யோகா height increase device ஐ ஆண்கள் உபயோகிக்கலாமா ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.