கீழடிக்கு இணையாக அகழாய்வுப் பொருட்கள் கிடைக்கும் பகுதியாக விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் பகுதி உள்ளது. இங்கு மக்கள் பழங்கால பொருட்களைப் பார்வையிட அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு,சிவப்பு நிற பானை ஓடுகள், அகல் விளக்கு,ஆண் உருவ சுடுமண் பொம்மை அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாளான தோசைக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தோசை சுடுவதற்கு இப்பகுதியில் வாழ்ந்த முன்னோர்கள் இதனைப் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதனை அறிய முடிகிறது. வெம்பக்கோட்டையில் மேலும் பல முக்கியப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|