LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட அகழாய்வில் செங்கலால் கட்டப்பட்ட கால்வாய் ஒன்று  கண்டறியப்பட்டுள்ளது.சங்ககாலக் கோட்டையின் தடயம் நிலைத்திருக்கும் இடம் தான் புதுக்கோட்டை மாவட்ட பகுதியான பொற்பனைக்கோட்டை. கோட்டைச்சுவர்,அகழி போன்றவை இருப்பதனை அறிந்து தொல்லியல் ஆய்வாளர்களான  இராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆ. மணிகண்டன் ஆகியோர் இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவினால் இப்பகுதியினை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தினர், தொல்லியல் துறையின் பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்து குழிகள் தோண்டப்பட்டு, ஆய்வில் ஈடுபட்ட போது ஒரு குழியில் இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானத்தால் ஆன கால்வாய் கண்டறியப்பட்டுள்ளது.பொற்பனைக்கோட்டையின் அரண்மனைமேட்டு பகுதிக்கு அருகான விவசாயி ஒருவரது நிலத்தில் பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,தற்போது சங்க கால செங்கல் கட்டுமானமும் கண்டறியப்பட்டுள்ளது.

இ.மணிகண்டன் அவர்கள், செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது எனவும், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் போது தமிழ்நாட்டிற்கும், இந்திய வரலாற்றுக்கும் புதிய வெளிச்சம்,இந்த அகழாய்வினால் உண்டாகும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

by R.Gnanajothi   on 28 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.